சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 34 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை  முதியவருக்கு 34 ஆண்டு சிறை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி போயர் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (63). இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதில் அச்சிறுமி கர்ப்பமானார்.

இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். இவ்வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பேத்தி முறை உள்ள உறவுக்கார பெண் என தெரிந்தும், அவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் கோவிந்தராஜூக்கு, விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in