

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியதிட்டத்தை தொடர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் சங்க மாவட்ட தலைவர் து.செந்தூர்ராஜன் தலைமையில் மறியல் நடைபெற்றது. அவர்கள்கைது செய்யப்பட்டு திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு அவர்களை போலீஸார் விடுவித்தபோது, அரசு ஊழியர் சங்கத்தினர் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு 8 மணியளவில் டிஎஸ்பி கணேஷ் அங்கு வந்து, மண்டபத்தில் மறுநாள் (பிப்.3) தனியார் நிகழ்ச்சி உள்ளது. எனவே, மண்டபத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அரசு ஊழியர் சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறி, டூவிபுரம் 2-வது தெருவில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு சென்று, அங்கு அமர்ந்து இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர். 2-வது நாளாக நேற்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.
திருநெல்வேலி
நாகர்கோவில்
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக அரசு ஊழியர்கள் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.