லஞ்சம் கேட்ட சமூக நல விரிவாக்க அலுவலர் கைது

லஞ்சம் கேட்ட சமூக நல விரிவாக்க அலுவலர் கைது
Updated on
1 min read

சின்ன சேலம் அருகே தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், தன் மகள் திருமணத்திற்கு அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதை பரிந்துரை செய்ய சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி ரூ. 1,500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைபடி ரசாயனம் தடவிய பணத்தை, விழுப்புரம் ஆட்சியர் அலுவலக சமூகநலத்துறை அலுவலகத்தில் இருந்த ஜெயலட்சுமியிடம் நேற்று ராமலிங்கம் கொடுக்க, மறைந்திருந்த போலீஸார் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in