வேன் ஓட்டுநர் கொலை நண்பர் தலைமறைவு

வேன் ஓட்டுநர் கொலை நண்பர் தலைமறைவு
Updated on
1 min read

ஈரோடு புன்செய்புளியம்பட்டி அருகே வேன் ஓட்டுநரைக் கொலை செய்த கூலித்தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியை அடுத்த அன்னேகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (32). வேன் ஓட்டுநர்.

அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அல்லிமுத்து (31). இருவரும் நண்பர்களாகப் பழகிய நிலையில், தனது உறவினருடனான தொடர்பை தவிர்க்குமாறு, மகேந்திரனிடம் அல்லிமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில், அல்லிமுத்து தாக்கியதில் மகேந்திரன் இறந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள புன்செய் புளியம்பட்டி போலீஸார், தலைமறைவான அல்லிமுத்துவைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in