ஓவிய, சிற்பக் கண்காட்சி தொடக்கம்

ஓவிய, சிற்பக் கண்காட்சி தொடக்கம்
Updated on
1 min read

திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டுத் துறை சார்பில், 3 நாள் ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவில், அருங் காட்சியக காப்பாட்சியர் சத்திய வள்ளி வரவேற்றார். சென்னை கவின் கலை கல்லூரி முன்னாள் முதல்வர் ஓவியர் சந்துரு பேசும்போது, ``ஓவியர்களை வளர்த்தெடுக்க தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத் துறை முன்னெடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

கலை பண்பாட்டுத் துறையின் நெல்லை மண்டல உதவி இயக்குநர் சுந்தர் நன்றி கூறினார். பொதிகை தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் பேரா, கவிஞர் சுப்பையா, கலையாசிரியர்கள் சொர்ணம், செல்லம்மாள் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் திருநெல் வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஓவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இக்கண்காட்சி வரும் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in