நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை பதவியிறக்கம் செய்ததை கண்டித்துமாணவர்கள், பெற்றோர் மறியல்

நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியரை  பதவியிறக்கம் செய்ததை கண்டித்துமாணவர்கள், பெற்றோர் மறியல்
Updated on
1 min read

பெரம்பலூர் அருகே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை பதவியிறக்கம் செய்ததைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலூரில் செல்வ முருகன் மானிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7 ஆசிரியர்களும், 265 மாணவ, மாணவிகளும் உள்ளனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வாசுகி. கடந்த சில மாதங்களாக பள்ளி நிர்வாகத்துக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் தலைமையாசிரியர் வாசுகியை பதவியிறக்கம் செய்துவிட்டு, அதே பள்ளியில் ஆசிரியர் ஒருவரை, புதிய தலைமை ஆசிரியராக நியமித்துள்ளது.

தலைமை ஆசிரியர் வாசுகியை பணியிறக்கம் செய்ததைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வயலூர் - அரியலூர் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸார் பள்ளி நிர்வாகத்தினர், தலைமை ஆசிரியர் வாசுகி மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in