சாலை விபத்தில் மாணவி உயிரிழப்பு

சாலை விபத்தில் மாணவி உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த பூங்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி லட்சுமணன்(38). இவரது மகள் வந்தனா(10). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், வந்தனா தனது பாட்டி வீட்டுக்கு திருப்பத் தூர் - ஆலங்காயம் சாலையில் மிதிவண்டியில் சென்றபோது, அவ் வழியாக வந்த டிப்பர் லாரி மாணவி மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட வந்தனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in