குடும்பத் தகராறில் மாமியார் விரலை கடித்த மருமகள் கைது

குடும்பத் தகராறில் மாமியார் விரலை கடித்த மருமகள் கைது
Updated on
1 min read

விருதுநகர் அருகே குடும்பத் தகராறில் மாமியார் விரலைக் கடித்து துண்டாக்கிய மருமகளை போலீஸாார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ள இ.சொக்கலிங்கபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி முத்துச்செல்வி (27). கருப்பசாமியின் தாய் முத்துஇருளி (45) அருகே உள்ள கோயில் தெருவில் வசித்து வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக கருப்பசாமி அவரது தாயார் வீட்டில் உள்ளார். இந்நிலையில், மகனை அவரது வீட்டுக்குச் செல்ல விடாமலும், மனைவி முத்துச்செல்வியிடம் பேசவிடாமலும் முத்துஇருளி தடுத்ததாகக் கூறப்படுறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்துச்செல்வி தனது மாமியார் முத்துஇருளியிடம் நேற்று தகராறு செய்தார். அப்போது அவரது விரலைக் கடித்து துண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து புகாரின்பேரில் வச்சக்காரப்பட்டி போலீஸார் முத்துச் செல்வியைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in