சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொழிலாளி கைது
Updated on
1 min read

திருப்பூர் மணியகாரம்பாளையம் சரஸ்வதி காம்பவுண்டை சேர்ந்தவர் ராஜ் (37). இவருடைய சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை. திருப்பூரில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், 17 வயது சிறுமியுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டப் பிரிவுகளின் கீழ், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்தனர். ராஜை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in