தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது திமுக அமைப்பு செயலாளர் பேச்சு

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திமுக அமைப்புச்செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ், மேற்கு மாவட்ட துணை செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்து பேசும்போது, ‘‘அதிமுக தொண்டர்கள் கூட அடுத்து திமுக ஆட்சி தான் வரும் என உறுதிபட கூறுகின்றனர். இந்தியாவில் முதல் முறையாக திமுக வழக்கறிஞர் அணி தான் வாக்கு இயந்திரத்தை முறையாக ஆய்வு செய்தனர். தமிழகத்தில் இனிமேலும் பாஜக காலூன்ற முடியாது,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in