காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
Updated on
1 min read

மூத்த குடிமக்கள் இயக்கத்தின் சார்பில், மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முத்துப்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகே மனிதச் சங்கிலியாக கரம் கோர்த்து நின்றனர். இதில், மூத்த குடிமக்கள் இயக்கத் தலைவர் ராஜாராமன், முன்னாள் தலைவர் சக்திவேல், செயலாளர் நடராஜன், தமிழ் இலக்கிய மன்றச் செயலாளர் ராஜ்மோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் தாந்தோணிமலையில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட துணைத்தலைவர் சின்னையன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in