தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கோபியில் 9-ம் தேதி நடக்கிறது

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கோபியில் 9-ம் தேதி நடக்கிறது
Updated on
1 min read

கோபியில் வரும் 6-ம் தேதி நடக்கவிருந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, கோபி கலை அறிவியல் கல்லூரியில், வரும் 6- ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நிர்வாக காரணங்களால், தனியார் வேலைவாய்ப்பு முகாம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். முகாம் நடைபெறும் நாளன்று சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை நகல் மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in