ஸ்டாலின் வரவேற்பு திமுக எம்எல்ஏ மீது வழக்கு

ஸ்டாலின் வரவேற்பு திமுக எம்எல்ஏ மீது வழக்கு
Updated on
1 min read

திருவண்ணாமலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற் காக நேற்று முன்தினம் இரவுசெஞ்சி வழியாக திருவண்ணா மலைக்கு ஸ்டாலின் சென்றார். அப்போது, செஞ்சி நான்குமுனை சந்திப்பில், திமுகவினர் தடை உத்தரவை மீறி பொதுமக்களை கூட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, செஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபி செஞ்சி போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் செஞ்சி போலீஸார், எம்எல்ஏ மஸ்தான், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், நெடுஞ் செழியன் உள்ளிட்ட 10 பேர் மீது செஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in