அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, விருதுநகரில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.

புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங் கிணைப்பாளர் முனியாண்டி தலை மை வகித்தார். நிர்வாகி குருசாமி தொடக்க உரையாற்றினார். கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க நிர்வாகி அந்தோணிராஜ் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார். பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் நிறைவுரையாற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in