விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கு மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பவுன்தாய், இந்திராணி, தங்கேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலப் பொதுச் செயலர் டெய்சி, சிஐடியூ மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, மாவட்டச் செயலர் தேவா ஆகியோர்பேசினர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in