சிறப்பாக பணியாற்றும் 24 போலீஸாருக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் காவல் அலுவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் காவல் அலுவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
Updated on
1 min read

கடந்த 25 ஆண்டுகளாக காவல் துறையில் எவ்வித தவறும் செய்யாமல் பணியாற்றும் காவல் அலுவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.

காவல் துறையில் தவறு ஏதும் செய்யாமலும், தண்டனை பெறாமலும் சிறப்பாக பணியாற்றும் காவல் அலுவலர்களுக்கு தமிழக அரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் சுப்பரமணியன் உட்பட உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என 24 காவல் அலுவலர்கள் இதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், 24 காவல் அலுவலர்களை பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, தொடர்ந்து, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in