மேலப்பாட்டம் வெங்கடாஜலபதி கோயிலில் பிப்.1-ல் கும்பாபிஷேகம்

மேலப்பாட்டம் வெங்கடாஜலபதி  கோயிலில் பிப்.1-ல் கும்பாபிஷேகம்
Updated on
1 min read

பாளையங்கோட்டை மேலப்பாட்டம் வெங்கடாஜலபதி கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சாந்தி ஹோமம், பிம்ப சுத்தி ஹோமம், தீபாராதனை பிரசாத விநியோகம் நடைபெறுகிறது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை மூர்த்தி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 1-ம் தேதி காலை 6 மணி முதல் புண்யாகம், உபரிஷ்டாதந்தரம், கடம் புறப்பாடும், காலை 9.15 மணிக்குமேல் 10.06-க்குள் மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. மாலையில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, உதவி ஆணையர் தி. சங்கர், செயல் அலுவலர் செ. சுஜாதா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in