குடிநீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி மனு

குடிநீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி மனு
Updated on
1 min read

மனிதநேய மக்கள் கட்சி மேலப்பாளையம் 38- வது வார்டு கிளை தலைவர் ராகத் செய்யது அலி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:

மேலப்பாளையத்தில் 38-வது வார்டுக்கு உட்பட்ட சேக் முகம்மது மூப்பன் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன . இங்கு சட்டப் பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சிறிய குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களாக குடிநீர் தொட்டியின் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் உடைந்து பயன்பாடில்லாமல் உள்ளது.

மேலும், தெருவின் தெற்கு பகுதியில் ஆழ்குழாய் அடி பம்பும் செயல்படாமல் உள்ளது. இதனால் தெருவில் உள்ள பொதுமக்கள் தண்ணீருக்காக அலைகின்றனர் . எனவே, போர்க்கால அடிப்படையில் குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்குழாய் அடிபம்பை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in