

அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கோரி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக, வன்னியர் சங்கத் தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித் தனர்.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 6-ம் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு பாமகவின் மாநில துணை பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.எல்.இளவழகன் தலைமையில் நடை பெற்றது.
இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப் பாட்டத்தின் முடிவில், இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் பாமக, வன்னியர் சங்கத்தினர் அளித்தனர்.
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
இதில், தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத் தலைவர்கள் ஆனந்தன், கோபி, மாநில மகளிரணி துணை செயலாளர் புஷ்பா, மாநில மகளிரணி துணைத் தலைவர் ரேவதி ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத் திடம் பாமகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். இறுதியில், மாநில துணை பொதுச் செயலாளர் காளி தாஸ் நன்றி கூறினார்.