வேலூர், திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகங்களில் பிப்ரவரி-1 முதல் வாரந்தோறும்மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர், திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகங்களில் பிப்ரவரி-1 முதல் வாரந்தோறும்மக்கள் குறைதீர்வு கூட்டம்
Updated on
1 min read

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங் களில் வரும் திங்கட்கிழமை முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. காயிதே மில்லத் அரங்கில் நடைபெறும் முகாமில் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் கட் டாயம் முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடை வெளியை கடைபிடித்து வந்தால் மட்டுமே மனுக்கள் பெறப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல், ‘‘திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். இதில், பங்கேற்கும் பொதுமக்கள் கரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும், புதிய மனுக்கள் பதிவு நடைமுறைப்படி தவறாமல் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் கைப்பேசியுடன் வர வேண்டும்’’ என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in