சேலம் பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

சேலம் பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது
Updated on
1 min read

சேலம் மாவட்டம் பனமரத்துப் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி ரேகா (30). ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ரேகா வந்திருந்தார். வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் ரேகாவைக் கொலை செய்து விட்டு தப்பினார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில், ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (34) என்பவர் கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட ரேகா, ஈரோட்டில் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்தபோது, செந்தில்குமார் உடன் பணிபுரிந் துள்ளார்.

ஈரோட்டுக்கு ரேகா வந்திருப்பதை அறிந்த செந்தில்குமார், அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, ரேகா அணிந்திருந்த 6 பவுன் நகையை செந்தில்குமார் பறிக்க முயன்றபோது, தகராறு ஏற்பட்டு, கொலை நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in