கட்சிக் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றியதாக புகார்

கட்சிக் கொடிக் கம்பத்தில்  தேசியக் கொடி ஏற்றியதாக புகார்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை அங்கு வந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களது கட்சிக் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி, பூக்கள் தூவினர்.

இதனை கண்ட மாற்றுக் கட்சியினர், அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர் சூளகிரியிலும் கட்சிக் கொடி கம்பத்தில் தேசியக் கொடியை அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏற்றினர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதரிடம் கேட்ட போது, ‘‘கட்சி கொடி கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றக் கூடாது. இது தேசியக்கொடி அவமதிப்பின் கீழ் வரும். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களிடம் புகார் பெறப்பட்டு, சிஎஸ்ஆர் பதிவு செய்யப்படும்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in