காங்கயம் அருகே விவசாயிகள் தொடர் போராட்டம்

காங்கயம் அருகே விவசாயிகள் தொடர் போராட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் உயர் மின் வழித்தட திட்டத்தை சாலையோர புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்திவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் 6 வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், விவசாயிகளை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in