சேலம் பெண் ஈரோட்டில் கொலை

சேலம் பெண் ஈரோட்டில் கொலை
Updated on
1 min read

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேகா (30). ஈரோடு மிட்டாய்கார வீதியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு ரேகா நேற்று முன்தினம் வந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற நிலையில், ரேகா தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், ரேகாவைக் கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். ரத்தக்கறையுடன் இளைஞர் வெளியேறுவதைப் பார்த்த அருகில் இருந்தோர், வீரப்பன்சத்திரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீஸார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வீரா, வரவழைக்கப்பட்டு, குற்றவாளியைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ள போலீஸார், ரேகாவின் கணவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும், எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in