காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் கொளஞ்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சங்க செயல்பாடுகள், பணிகள், பணியாளர்களின் நிலைமை, பள்ளி செயல்படுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில், சத்துணவு அமைப் பாளர், உதவியாளர், சமையலர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in