மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது.

இதையொட்டி மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் சிவக்குமார், மகளிரணி நிர்வாகி சர்மிளா,தொண்டரணி நிர்வாகி மணிமாறன், மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in