தென்னிந்திய கபடிப் போட்டியில் காசர்கோடு அணிக்கு முதல் பரிசு

தென்னிந்திய கபடிப் போட்டியில் காசர்கோடு அணிக்கு முதல் பரிசு
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கீழப்பாவூர் விளையாட்டுக் குழு சார்பில் 3 நாட்கள் கபடி போட்டி நடைபெற்றது .இதில், ஆண்கள் பிரிவில் கேரள மாநிலம் காசர்கோடு ஜெ.கே. ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி முதலிடம் பிடித்தது. அந்த அணிக்கு பரிசாக ரூ.60 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த சென்னை டி.பி.ஜெயின் கல்லூரிக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி வாய்ப்பை தவற விட்ட மதுரை கஸ்டம்ஸ் அணி, மங்களூர் மெர்டியன் கல்லூரி அணி ஆகியவற்றுக்கு தலா 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற திருப்பூர் ஜெயசித்ரா டெக்ஸ்டைல்ஸ் அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த ஒட்டன்சத்திரம் எஸ்எம்விகேசி அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.

வெற்றி வாய்ப்பை தவற விட்ட தமிழ்நாடு போலீஸ் அணி, கோபிச்செட்டிபாளையம் பி.கே. கல்லூரி அணி ஆகியவற்றுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் கீழப்பாவூர் விளையாட்டுக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in