திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
Updated on
1 min read

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார். மாநில, மாவட்ட, தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை, சிபிஐ அதிகாரிகள் உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். புதிய வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

தொடர் மழையில் மூழ்கிய பயிர்களுக்கும், பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். நிவர், புரவி புயல்கள் பாதிப்புக்கு ஏக்கருக்கு நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரம் என்பதை, ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in