சுத்தமல்லியில் ஆயுர்வேத மருத்துவமனை திறப்பு

சுத்தமல்லியில் கிராமப்புற ஆரோக்கியம் மற்றும் நல மையத்தை ஆட்சியர்  வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
சுத்தமல்லியில் கிராமப்புற ஆரோக்கியம் மற்றும் நல மையத்தை ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் சுத்தமல்லியில் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின்கீழ் கிராமப்புற ஆரோக்கியம் மற்றும் நல மையம் (ஆயுர்வேத மருத்துவப் பிரிவு) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார். திருநெல்வேலி கோட்டாட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, மருத்துவர்கள் ஹரிஹரன், காளிதாஸ், உமா ஜானகி, திவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுபோல் ராஜவல்லிபுரத்தில் கிராமப்புற சித்த மருத்துவ மனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in