ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கவிதா தம்பதியரின் இரண்டாவது மகன் பிரகாஷ்(11). இவர், நேற்று மதியம் தனது நண்பர்களுடன் மேலப்புலியூர் ஏரிக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதையடுத்து, சிறுவனின் சடலத்தை மீட்ட அவரது உறவினர்கள் நேற்று மாலை இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தகவல றிந்த பெரம்பலூர் போலீஸார், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in