எஸ்ஐ மீது நடவடிக்கை கோரி டிஎஸ்பியிடம் புகார் மனு

எஸ்ஐ மீது நடவடிக்கை கோரி டிஎஸ்பியிடம் புகார் மனு
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் வாகன ஓட்டுநர் முகமது யூசுப் காயமடைந்ததாக பல்வேறு கட்சிகள் சார்பில் டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது.

வாகன ஓட்டுநரை தாக்கிய புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் சுலைமான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் பஷீர் ஒலி ஆகியோர் தலைமையில் திமுக நகரச் செயலாளர் ராஜ் காந்த், முஸ்லிம் லீக் நகரத் தலைவர் அப்துல் வஹாப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் வேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான், நகர வர்த்தக சங்கச் செயலாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் இந்த மனுவை அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in