கார் எரிந்து டிராவல்ஸ் உரிமையாளர் உயிரிழப்பு

கார் எரிந்து டிராவல்ஸ் உரிமையாளர் உயிரிழப்பு
Updated on
1 min read

சிவகாசி அருகே கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (34). டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி வினோதயா (29), 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந் தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், சவாரி செல்வதற்காக தனது காரில் கவுண்டன்பட்டியிலிருந்து எரிச்சநத்தம் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குருநாதன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பற்றி எரிவதாகவும், தான் வெளியே வர முடி யாமல் தவிப்பதாகவும் தனது தந்தை முனியாண்டிக்கு குருநாதன் செல்போனில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு முனியாண்டி சென்று பார்த்தபோது, முற்றிலும் எரிந்த காருக்குள் குருநாதன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆமத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in