சாமியார்பேட்டை அருகே கடலில் மூழ்கி இளைஞர் மாயம்

சாமியார்பேட்டை அருகே கடலில் மூழ்கி இளைஞர் மாயம்
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி வட்டம் அம்பல வாணன்பேட்டையைச் சேர்ந் தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்குமார் (22). டிப்ளமோ படித்துள்ளார்.

காணும் பொங்கலான நேற்று மாலை அருண் குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான செல்வக்கணபதி, சுபாஷ் காந்தி ஆகியோர் ஒருபைக்கில் சாமியார்பேட்டை அருகே உள்ள பேட்டோடை கடற்கரை பகுதிக்கு சென்றுள் ளனர். பின்னர் 3 பேரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது அலையில் சிக்கி அருண்குமார் கடலில் மூழ்கி மாயமானார். அதிர்ச்சியடைந்த செல்வக்கணபதியும், சுபாஷ் காந்தியும் புதுச்சத்திரம் போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், தீயணைப்புதுறை யினர் அருண்குமாரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in