விருதுநகர் அருகே வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

விருதுநகர் அருகே வீட்டின் சுவர் இடிந்து  மூதாட்டி உயிரிழப்பு
Updated on
1 min read

விருதுநகர் அருகே பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்மணி (76). இவரது கணவர் ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவர்களது 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.

ருக்மணி மட்டும் பட்டம்புதூர் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ருக்மணி வீட்டின் சுவர் நேற்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபா டுகளுக்குள் சிக்கி ருக்மணி சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சூலக்கரை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ருக்மணியின் சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in