

காணும் பொங்கலான இன்று கடற்கரைகளுக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள தாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கரோனா தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு, தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, கடலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கலான இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
மேற்கண்ட தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சுற்றுலா தலம், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை, தாழங்குடா கடற்கரை, சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய முக்கிய கடற்கரை பகுதிகளிலும் மற்றும் இதரகடற்கரை பகுதிகளில் இன்று மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆற்றுத்திருவிழா
செஞ்சிகோட்டையை பார்வையிட தடை
கள்ளக்குறிச்சி