கிருஷ்ணகிரி அணையில் பொதுமக்கள் கூட தடை

கிருஷ்ணகிரி அணையில் பொதுமக்கள் கூட தடை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அணை, அவதானப் பட்டி பூங்காவில் இன்றும் (16-ம் தேதி), நாளையும் (17-ம் தேதி) பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் அதிகமான பொது மக்கள் கூட வாய்ப்புள்ளதால், கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (16-ம் தேதி) மற்றும் நாளை (17-ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் மேற்கண்ட இடங்களில் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த இடங்களில் கூடு வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in