தொழிலாளியை தாக்கியதாக சூப்பர்வைசர் கைது

தொழிலாளியை தாக்கியதாக  சூப்பர்வைசர் கைது
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே வேட்டுவபாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (55). இவர், பொங்கலூர் கள்ளிபாளையத்திலுள்ள தனியார் நூற்பாலையில் தங்கி வேலைசெய்து வந்தார். அதே ஆலையில்பூபதி ராஜா (33) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இருவரும் அருகருகே உள்ளஅறையில் தங்கியுள்ளனர்.

கடந்த 10-ம் தேதி இரவு பூபதி ராஜா தனது அறையில் புகை பிடித்துள்ளார். அருகிலுள்ள தனது அறைக்கு புகை வந்ததால் ராமசாமி தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பூபதி ராஜா, இரும்பு கம்பியால் ராமசாமியை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ராமசாமி, திருப்பூரில் உள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டார். காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து பூபதிராஜாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in