அபிஷேக ஆராதனையுடன் அனுமன் ஜெயந்தி

அபிஷேக ஆராதனையுடன் அனுமன் ஜெயந்தி
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் அனுமன்ஜெயந்திவிழா நேற்று கொண்டா டப்பட்டது.

விழுப்புரத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ளசுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. செஞ்சி கோட் டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு செந்தூரக்காப்பு சாற்றி மலர்களால் அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை  பக்த ஆஞ்சநேயர் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in