தொடர் மழையால் பயிர்கள் அழுகி சேதம் இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் மனு

மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அழுகிய பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆற்றங்கரை பகுதி விவசாயிகள். 			        படம்: என்.ராஜேஷ்
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அழுகிய பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆற்றங்கரை பகுதி விவசாயிகள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் த.ரகுராமர் தலைமையில் விவசாயிகள், அழுகிய பயிர்களுடன் வந்து அளித்த மனு:

ஆற்றங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓ.துரைச்சாமிபுரம், சொக்கலிங்கபுரம், அ.கந்தசாமிபுரம், தொப்பம்பட்டி, கல்குமி, ஆற்றங்கரை ஆகிய ஊர்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெய்து வரும் பெருமழையால் சுமார் 800 ஹெக்டேர் பரப்பில் உளுந்து, பாசிப்பயறு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம், கம்பு போன்ற பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. எனவே, இந்த கிராமங்களில் வசிக்கும் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

2017- 2018-ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு உடனே மடிக்கணினி வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையாபுரம் வாதிரியார் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: வாதிரியார் சாதி பெயரை புதிய பெயர் மாற்றம் செய்யக் கூடாது. வாதிரியார் சாதிச் சான்றிதழை மாற்று சமுதாயத்துக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.

பாதை வசதி

பயிர் காப்பீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in