பாலியல் வன்கொடுமை: ஹோமியோபதி மருத்துவர் கைது

பாலியல் வன்கொடுமை: ஹோமியோபதி மருத்துவர் கைது
Updated on
1 min read

திருப்பூர் ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் ஜீவன்குமார் (50). இவர், ஊத்துக்குளி பகுதியில் ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவர், ஆசை வார்த்தை கூறி கடந்த செப்டம்பர் மாதம் 14 வயது சிறுமியை பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதை தாமதமாக அறிந்த சிறுமியின் பெற்றோர், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணைக்கு பிறகு, இந்த புகார் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, குழந்தைகள் பாலியல் குற்றப் பாதுகாப்புச் சட்ட (போக்ஸோ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஜீவன்குமாரை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in