பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கும்மிடிப்பூண்டி பெண் காவலரின் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியீடு

கும்மிடிப்பூண்டி பெண் காவலர் சசிகலா எழுதி, பாடிய விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் வெளியிட்டார்.
கும்மிடிப்பூண்டி பெண் காவலர் சசிகலா எழுதி, பாடிய விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் வெளியிட்டார்.
Updated on
1 min read

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், கும்மிடிப்பூண்டி பெண் காவலர் எழுதி, பாடிய விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சசிகலா என்ற பெண் காவலர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானசெயல்களை தடுக்கும் வகையில் ‘குட்டிமா’ என்ற தலைப்பில், விழிப்புணர்வு பாடலை எழுதி பாடியுள்ளார்.

ஜெயபிரகாஷ் என்ற இசையமைப்பாளரால், இசை அமைக்கப்பட்ட இந்த பாடல் கும்மிடிப்பூண்டியில் உள்ள புதிய அலைகள் ஒலி-ஒளிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ‘குட்டிமா’ விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை திருவள்ளூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் எஸ்பி அரவிந்தன் நேற்று முன்தினம் வெளியிட்டு, காவலர் சசிகலாவை பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in