பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
Updated on
1 min read

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி செல்லப்பட்ட புகையிலைப் பொருட்களை கந்திக்குப்பம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் போலீஸார் நேற்று அதிகாலையில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப் பள்ளி கூட்டு ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.

காருக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான பார்சல் கள் இருப்பது தெரிய வந்தது. எனவே, அவற்றை வெளியில் எடுத்து சோதனையிட்டபோது சிறு அட்டைப் பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் அடைக்கப்பட்டு சாக்குகளில் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. 38 அட்டைப் பெட்டிகளில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கார் ஓட்டுநரான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரகாஷ்(32) என்பவரை கைது செய்தனர். பான் மசாலா, புகை யிலைப்பொருட்கள் கடத்தலுக்குப் பின்னணியில் உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in