கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் ஒருவருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குகிறார் ஆட்சியர் த.ரத்னா.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் ஒருவருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குகிறார் ஆட்சியர் த.ரத்னா.
Updated on
1 min read

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ரத்னா கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிப் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் 12,940 தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புடவை, வேட்டியுடன் 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ பருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 1 கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) கு.விமலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in