மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழப்புதூர் அரச மரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சையது முஸ்தபா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மைதீன், கோரிக் கையை விளக்கிப் பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் இப்ராகிம்ஷா, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் ஆகியோர் பேசினர். கட்சி நிர்வாகிகள் முகம்மது பீர்ஷா, அந்தோனிராஜ், சேக் அப்துல்லா, கமால், ஆரிப், முபாரக், ஷேக் மைதீன், சையது முகம்மது, அன்வர், வாகித், ஜாகீர், ஜோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in