பாஸ்போர்ட் வழக்கில் ஒருவர் கைது

பாஸ்போர்ட் வழக்கில் ஒருவர் கைது
Updated on
1 min read

நாகை மாவட்டம் திருப்புகழூரைச் சேர்ந்தவர் சார்லஸ் ரிச்சர்டு பிரான்சிஸ்(52). சிங்கப்பூரில் பணிபுரிந்த இவர் மீண்டும் ஊர் திரும்புவதற்காக நேற்று முன்தினம் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.

விமானநிலைய குடியேற் றப்பிரிவு அதிகாரிகள் சோதனை யிட்டபோது, அவர் நாகை மாவட்டம் அச்சுதன் நாரா யணன்பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்று, அதன் மூலம் சிங்கப்பூர் சென்று வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குடியேற்றப் பிரிவு உதவி அலுவலர் இளையராஜா அளித்த புகாரின்பேரில் விமானநிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து சார்லஸ் ரிச்சர்டு பிரான்சிஸை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in