வேலூர் சிறைக்கு புதிய கண்காணிப்பாளர் நியமனம்

வேலூர் சிறைக்கு புதிய கண்காணிப்பாளர் நியமனம்
Updated on
1 min read

வேலூர் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளராக ருக்மணி பிரியதர்ஷினி நியமிக்கப் பட்டுள்ளார்.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் தனிச் சிறைகள், 9 மாவட்ட கிளை சிறைச்சாலைகள் உள்ளன.

இதில், மத்திய சிறைகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றிய 4 சிறைத்துறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை ஏடிஜிபி சுனில் குமார்சிங் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வேலூர் மத்திய சிறைத்துறை கண்காணிப் பாளராக பணியாற்றி வந்த ஆண்டாள், புதுக்கோட்டை மத்திய சிறைக்கும், அங்கு பணியாற்றி வந்த ருக்மணி பிரியதர்ஷினி வேலூர் மத்திய சிறைச்சாலைக்கும் பணியி டமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in