கவிழ்ந்த சரக்கு வாகனத்தை மீட்க சென்ற மற்றொரு வாகன ஓட்டுநர் விபத்தில் மரணம்

கவிழ்ந்த சரக்கு வாகனத்தை மீட்க சென்ற மற்றொரு வாகன ஓட்டுநர் விபத்தில் மரணம்
Updated on
1 min read

சென்னையை சேர்ந்தவர் ராஜேஷ்(20). இவர், கார் உதிரிபாகங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பொடாரம்பா ளையம் பிரிவு அருகே நேற்று அதிகாலை சென்றபோது, நிலைதடுமாறி சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது.

அப்போது, அந்த வழியாக கோவையில் இருந்து சேலத்துக்கு சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தகோவை வெள்ளலூரை சேர்ந்தஆயுஷ்கான் (40), மற்றொரு சரக்கு வாகனத்தில் வந்த கோவையை சேர்ந்த முரளிதரன் (25) மற்றும் சிலர் விபத்துக்குள்ளான வாக னத்தை மீட்க இறங்கியபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆயுஷ்கான் உயிரிழந்தார். காயமடைந்த முரளிதரன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு, ஆயுஷ்கான் உடல் அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in