ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா
Updated on
1 min read

வேலூரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலை நேர தர்ணா நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்க வேண்டும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் மணி தலைமை யில் நடைபெற்ற தர்ணாவில் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in