தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021-2022 -ம் கல்வியாண்டுக்கு 1.7.2021 முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. இதன் பொருட்டு 2.1.2021 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.04.2021. மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இது தொடர்பாக, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கிவரும், திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். தொலைபேசி எண்: 0462-2342432

மின்னஞ்சல் முகவரி: dadtvl2018@gmail.com.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in