மூதாட்டியிடம் நகை பறிப்பு விரட்டிப் பிடித்த காவலர்

மூதாட்டியிடம் நகை பறிப்பு     விரட்டிப் பிடித்த காவலர்
Updated on
1 min read

விருதுநகரில் மூதாட்டியிடம் நகை பறித்துக் கொண்டு தப்பியோடியவரை காவலர் ஒருவர் விரட்டிப் பிடித்து கைது செய்தார்.

விருதுநகர் பாண்டியன் நகர் கருப்பசாமி நகரைச் சேர்ந்த செல்லசாமி மனைவி பாப்பம்மாள் (60). நேற்று காலை ரயில்வே காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர், மூதாட்டி பாப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

பாப்பம்மாளின் கூச்சல் கேட்டு அப்பகுதியில் ரோந்து சென்ற காவலர் பாஸ்கரன் மற்றும் செய்யது என்பவரும் நகை பறித்த நபரை துரத்திச்சென்று பிடித்தனர். விசாரணையில், நகை பறித்தவர் விருதுநகர் நீராவி தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (31) என்பது தெரியவந்தது. அதையடுத்து, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்துக்கு வினோத்குமாரை பிடித்துச் சென்ற போலீஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in